Site icon Tamil News

வடமாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நீண்ட தூரம் மற்றும் குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து தனியார் பஸ் சாரதிகளும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய தனியார் பஸ் சாரதிகள் யாழ்.டிப்போவிற்கு முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர பேருந்து நிறுத்தம் கோரி அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version