Site icon Tamil News

கடத்தல் குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது

மாகோல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று காணி உறுதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டை திருடிய சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபாரியைக் கடத்துவதற்கு பிக்குவுக்கு உதவிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அடையாளப்படுத்திய விசேட அதிரடிப்படைத் தலைமையகத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சாரதி ஆகியோரைக் கைது செய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் வர்த்தகர் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கடத்தலுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர் தெமட்டகொட பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version