Site icon Tamil News

நாமலின் ஆட்சியில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிரதமர் பதவி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதமராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வாரத்திற்குள் பிரச்சாரம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு, சஜித் பிரேமதாசவுடன் மட்டுமே போட்டி இருப்பதாக அவர் கூறுகிறார்

Exit mobile version