Site icon Tamil News

வீட்டில் பொய் சொல்லிவிட்டுச் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி

கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் ஆற்றுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிகா சுதம் என்ற 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) மாலை கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ ஆற்றுக்கு குளிப்பதற்கு 9 பேர் சென்றுள்ளதுடன், மாலை 5.30 மணியளவில் 5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர்.

சஸ்மிகா நீரில் மூழ்கி காணாமல் போனதையடுத்து, நேற்று இரவு வரை பொலிஸ் உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் தேடினர்.

ஹிக்கடுவ புகையிரத பாலத்திற்கு அருகில் உள்ள ஹிக்கடுவ ஆற்றில் இன்று (21) காலை மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version