Site icon Tamil News

நாய்க்கு சொகுசு பஸ் : இலங்கை அமைச்சரின் அட்டகாசம்!

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது அமைச்சருக்கு சொந்தமான செல்ல நாய் மற்றும் பேருந்தின் சாரதி மாத்திரமே அங்கு இருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ள போதிலும், சாரதிக்கோ நாய்க்குட்டிக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நாய்க்குட்டியின் சுகவீனத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்து  சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

செல்ல நாய்க்குட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த பேருந்து அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரிடம் பல செல்ல நாய்கள் இருப்பதாகவும் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version