Site icon Tamil News

தம்மிக்க பெரேரா குறித்து வௌியான செய்திகளுக்கு மொட்டு கட்சி மறுப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா மறுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக தம்மிக்க பெரேராவையும், நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவையும் நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கையில், அவ்வாறான தீர்மானங்களை கட்சி எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் கூறுகையில், கட்சியின் நிறைவேற்று சபை கூடி இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அந்த குழு கடந்த சனிக்கிழமை முதல் கூடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version