Site icon Tamil News

இரு சுவர்களின் குறுகிய இடைவெளியில் சிக்கிக்கொண்ட மாணவி

களுத்துறை பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரை களுத்துறை மாநகரசபை தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமி சுமார் 30 நிமிடம் அந்த இடத்தில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை கட்டுகுருந்த கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமியே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பாடசாலையில் கழிப்பறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே உள்ள குறுகிய இடத்தில் அந்த மாணவி சிக்கிக் கொண்டார்.

சம்பவம் தொடர்பில் ஸ்தலத்திற்கு வந்த களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் அதிநவீன கருவியின் உதவியுடன் இரு சுவர்களை தள்ளி சிறுமியை பத்திரமாக அங்கிருந்து மீட்டுள்ளனர்.

 

Exit mobile version