Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள செய்தி!

நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06.12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சகல துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பழைய முறைப்படி நடப்பதன் மூலம் நாட்டிற்கு நாளைய தினம் இல்லை எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Exit mobile version