Site icon Tamil News

ஜனாதிபதி ரணில் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்ற ஹெலிகொப்டர் அவசர தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (14) பிற்பகல் எப்பாவல, கடியாவ வெல்யவில் தரையிறங்கியுள்ளது.

ஹெலிகொப்டரின் தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அதனை மீளமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஹெலிகாப்டரை மீட்பதற்காக குழுவொன்று ஏற்கனவே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Exit mobile version