Site icon Tamil News

காணாமல் போன சிறுமிகள் கண்டுப்பிடிப்பு

சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கிண்ணியாகலை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

களனி – மீகாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் (2) இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாகலை பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய அஷானி வஷ்மிகா மற்றும் பவீஷா நெத்மினி ஆகிய இருவரும் காணாமல் போயிருந்தனர்.

பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி ஆஷானியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்த வீட்டில் பாட்டியை பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ம் திகதி காலை வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வந்த பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இந்த இரண்டு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version