Site icon Tamil News

சுவிட்சர்லாந்தில் ஐ.எம்.எஃப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி ரணில்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அவர் தனது எக்ஸ் கணக்கில் இந்த தகவலைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பலன் கிடைத்து வருவதையே இது காட்டுகிறது.

மேலும், அந்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்திற்கு பதிலளிக்கும் வகையில், விரிவான கடன் நிதியம் தொடர்பான முதல் மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version