Site icon Tamil News

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர், அரியநேத்திரனுக்கு சங்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள ப.அரியநேத்திரனுக்கான தேர்தல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற “சின்னம் சங்கு” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (15) வேட்புமனுவை சமர்ப்பித்த 39 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Exit mobile version