Site icon Tamil News

கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த அங்கிகாரம்

Sri Lanka port, container terminal with global trade background

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் உலகின் சிறந்த வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

கப்பல் துறையின் முன்னணி ஆய்வு வெளியீடான அல்பாலைனர் இதனைத் தெரிவித்துள்ளதாக ருவன்சந்திரா கூறுகிறார்.

2024 ஆம் ஆண்டில் 23.6% என்ற சிறந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை அடைவதற்கு தடையாக இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ருவன்சந்திர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version