Site icon Tamil News

விரைவில் நடைமுறைக்கு வரும் கோழி இறைச்சி – முட்டை தொடர்பான சட்டங்கள்: மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோழி முட்டை தொழில் துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளதால், கோழி வியாபாரிகளும் விலையை உயர்த்தியுள்ளனர்.

பாரிய இலாபம் பெறும் நோக்கில் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கோழி இறைச்சியை வழங்குவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version