இந்திய வம்சாவளியினர் உட்படமோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சப்- போஸ்ட்மாஸ்டர்களுக்கு புதிய முன்பணமாக 75,000 பவுண்டுகள் வழங்குவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக பலர் இழப்பீட்டுக்கு என காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும் விடுதலை மற்றும் இழப்பீடு கோருபவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையில் கையொப்பமிட வேண்டும் என்று தபால் துறை அமைச்சர் கெவின் ஹோலின்ரேக் கூறியுள்ளார்.