Site icon Tamil News

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் பெண் ஒருவர் அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வடக்கு கரோலினாவில் உள்ள புளூ ரிட்ஜ் பார்க்வேயில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே 150 அடி செங்குத்தான பாறையில் இருந்து தவறி விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் தேசிய பூங்காவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்தது குறித்து அதிகாரிகளுக்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியுள்ளது.

கிளாஸ்மைன் நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் அந்தப் பெண்ணை சுமார் 150 அடி குன்றின் கீழே கண்டெடுத்தனர் மற்றும் அவர் தென் கரோலினாவின் கிரேரைச் சேர்ந்த நான்சி சாம்ப்சன் என அடையாளம் கண்டுள்ளனர்.

Exit mobile version