Tamil News

தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திங்கட்கிழமை (31) திருகோணமலையில் காலை 09.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version