Site icon Tamil News

வெளிநாட்டில் வேலை பெற்றுதருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த மூவர் கைது!

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து 109 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி செய்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய பெண் ஒருவர் உட்பட  மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் பெற்றுதருவதாக கூறி 109 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதற்கு முன்னர் பணியகத்தின் அனுமதி பத்திரத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நபர்களை இணைத்துக்கொண்டுள்ளளது.

இருப்பினும் இதனை வைத்து மோசடி செய்தமையால் அனுமதிபத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version