Site icon Tamil News

இலங்கை பாராளுமன்றம்: வெளியான இரண்டு முக்கிய அறிவிப்புகள்

கடன் வழங்கும் நாடுகளுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (ஜூலை 02) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

எவ்வாறாயினும், ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான பாராளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவைக் கருத்தில் கொண்டு விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆர்.சம்பந்தனின் பூதவுடல் ஜூலை 03ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பாராளுமன்றத்தில் வைக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.பி.யான ஆர்.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்

Exit mobile version