உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்ய அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் சுமார் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் ஒன்றும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
முக்கிய தானிய ஒப்பந்தம் ஒன்றில் இருந்து விலகியதிலிருந்து மொஸ்கோ ஒடேசா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.