Site icon Tamil News

புது டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து : 11 பேர் பலி!

இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 04 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையின் தரைத்தளத்தில் தீப்பிடித்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர், பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற வழியின்றி மேலே உள்ள தளங்களில் சிக்கிக்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர 05 மணி நேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version