Site icon Tamil News

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாத முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இன்று (08) இரவு நாடு செல்ல தயாராகி வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியில் உள்ள பகுதியில் இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கணினி குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவது சில தினங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

Exit mobile version