இலங்கையில் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களில் 5 லட்சம் பேரில் 31,000 பேர் மட்டுமே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
குறித்த குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 150,000 வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த நிறுவனங்களின் வரி வருமானத்தில் 82% வீதம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.