Site icon Tamil News

மேலும் ஒரு வரித் திருத்தம் விரைவில்

சட்ட வரைவு துறையால் தயாரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், அதற்கான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைவு துறைக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

Exit mobile version