Site icon Tamil News

லண்டன் – பிரான்ஸ் நோக்கி பயணமாகும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, தலைவர் பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிஸ் கிளப் இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் கடன் ஸ்திரப்படுத்தலுக்கு தனது ஆதரவை முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version