Site icon Tamil News

இலங்கை இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் – ஜனாதிபதி வாக்குறுதி

இலங்கையில் அடுத்த வருடம் இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுயதொழில் பெறுவதற்காக 50 பேருக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்னோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படும் அம்பாறை வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version