Site icon Tamil News

நாட்டுக்காக எவருடனும் இணைய தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக யாருடனும் இணையவும் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நிறுத்துவாரா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (10) காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய தேர்தல் செயற்பாட்டு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜூன் 18 ஆம் திகதிக்குள் அறிவிக்கவுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version