Site icon Tamil News

இலங்கையில் சிறுவன் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுவன்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பன்வில – கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என்ற சிறுவனு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version