Site icon Tamil News

இலங்கை பணிப்பெண்ணின் மரணத்தில் மர்மம் – கீதாகுமாரசிங்க

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பில் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் விசாரணை நடாத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தூதுவருடன் அலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த குறித்த பெண் 7 வருடங்களாக குவைத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரிடம் தெரிவித்த இலங்கைத் தூதுவர், இது தொடர்பான விரிவான அறிக்கை பிரதமர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Exit mobile version