Site icon Tamil News

டென்மார்க்கில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி

டென்மார்க் Helsinge நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயம் அமைந்த நிலையில் Rigshospitalet வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய பெண் மற்றும் அவரது 13 வயது அவரது மகன் ஆகியோர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண்ணின் இரண்டாவது மகனான ஆபத்தான நிலையில் இருந்து தப்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version