Site icon Tamil News

சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹ, களுத்துறை,  இரத்தினபுரி,  கேகாலை,  குருநாகல்,  புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Exit mobile version