Site icon Tamil News

மோக்கா புயல் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக அதிகரிப்பு!

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்துள்ள நிலையில், புயிலினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ராணுவ வீரர்கள் 4 பேர்  உள்ளூர்காரர்கள் 24 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version