Site icon Tamil News

ஏமாற்று வேலைக்காக விரல்களில் காந்தங்களைப் பொருத்திய நபர் – 40 ஆண்டுகளுக்குப் பின் செய்த செயல்

தாய்லந்தைச் சேர்ந்த ஒருவர் தமது விரல்களில் காந்தங்களைப் பொருத்தியள்ளார்.

அவர் 40 வருடங்களுக்கு அதனை கையில் வைத்திருந்ததாக மருத்துவர் Wat Lun தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான Hi-Lo பகடை விளையாட்டில் வெற்றிபெற அவர் காந்தங்களைப் பொருத்தியதாக தெரியவந்துள்ளது.

விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பிய அந்த நபர் விமான நிலையப் பாதுகாப்பில் தமது விரல்களில் உள்ள காந்தங்கள் கண்டறியப்பட்டால் சமிக்ஞை ஒலிக்கும் என்று பயந்தார்.

அதனால் மருத்துவரிடம் அதை அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதைப் பற்றி வாட் லூன் தமது Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.

அந்த நபரின் இடது கையின் நடு, மோதிர விரல்களை வெட்டியபோது அதில் 2 காந்தங்கள் இருந்ததைக் கண்டதாகக் கூறினார் அவர்.

வாட் லூனின் பதிவு 3000க்கும் அதிகமான முறை இணையத்தில் பகிரப்பட்டது.

விளையாட்டில் ஏமாற்றிய ஆடவரைப் பலர் கண்டித்தாலும் அவரின் முயற்சியைப் பாராட்டியவர்களும் உண்டு.

Exit mobile version