Site icon Tamil News

இலங்கை வான்பரப்பில் விண்கல் மழை

நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) இலங்கையில் அதிகபட்சமாக லியோனிட் விண்கல் மழையை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியலாளர் கலாநிதி ஜானக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு அடிவானத்தில் பார்க்கும் போது இந்த இரண்டு நாட்களில் அதிகாலை 2:00 மணிக்குப் பிறகு இந்த விண்கற்கள் தென்படும் என்றார்.

இதன்போது ஒரு மணித்தியாலத்துக்கு 10-15 விண்கற்கள் காணப்படும் எனவும், இது அதிக எண்ணிக்கையிலான விண்கற்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version