Site icon Tamil News

தங்காலை ஏரிக்கு அருகில் நடந்த தாக்குதல்!! குண்டர்களை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணை

தங்காலை பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் இளைஞன் ஒருவரை ஒரு குழுவினர் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுபோன்ற வீடியோவில் இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் காணப்படுகின்றனர்.

இந்த தாக்குதல்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் அது தவறான செய்தியை கொடுக்கும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (23) முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் 17 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version