Site icon Tamil News

கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளை வெளியிடுவதை நிறுத்த மெட்டா முடிவு

கனேடிய அரசாங்கம் இயற்றிய சட்டத்தின் காரணமாக கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளை வெளியிடுவதை நிறுத்த மெட்டா முடிவு செய்துள்ளது.

அதன்படி புதிய சட்டத்தின் காரணமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்க மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் அவுஸ்திரேலியா நிறைவேற்றிய சட்டத்தை அடுத்து கனடா இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டத்தின்படி இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டால், சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் கனடாவிலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version