Site icon Tamil News

மேர்வின் சில்வா, தமிழர்கள் மீது பயங்கரமான இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்! செல்வராஜா கஜேந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் உள்ள விகாரைகள் பாதுகாக்கப்பட்டதாகவும், சேதமடையவில்லை என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள விகாராதிபதிகள் மீது கை வைத்தால், அவ்வாறு செய்யும் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வர நேரிடும் என மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, தமிழர்கள் மீது பயங்கரமான இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.

விகாரைகள் தாக்கப்படுவதாகவும், மகாநாயக்கர்கள் தாக்கப்படுவதாகவும் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் வழிபாட்டு தளங்கள் பாதுகாக்கப்பட்டு, எந்த இடத்திலும் சேதப்படுத்தப்படவில்லை.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை தாக்கிய புலிகளுக்கு வடக்கு கிழக்கில் உள்ள கோவில்களை அழிப்பது கடினமான காரியம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version