Tamil News

மண்டைதீவு சிறுப்புலம் ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவில் அலங்கார உற்சவம்

இலங்கைத் திருநாட்டின் வடக்கில் இயற்கை அழகும் வளமும் நிறைந்த மண்டைதீவு சிறுப்புலம் ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் அலங்கார உற்சவம் கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாக தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 11ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறையாக மண்டைதீவு ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் அலங்காரத்திருவழா நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் இவ்வாலயம் இடிபாடுகளுக்குள்ளாகி இருந்தது. பின்னர் 2023ஆம் ஆண்டு ஆலயத்தை புதுப்பித்து இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக இடம்பெற்றது.

இதையடுத்து முதன்முறையாக அலங்காரத்திருவிழா இடம்பெற்றது. புதிய தேரில் வலம் வந்து முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 19ஆ திகதி (19/7/2024) வெள்ளோட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து 20ஆம் திகதி (20/7/2024) தேர்த்திருவிழா இனிதே நடைபெற்றது.

 

 

 

Exit mobile version