Site icon Tamil News

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை பற்றி கருத்து தெரிவித்த மைத்திரிபால

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும், தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் தான் நாட்டை ஆட்சி செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்க தேரர் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினை எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

“நான் அந்த ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. இப்போது இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு தேவையில்லாத பிரச்னை எழுந்துள்ளது” என்றார்.

“அமைச்சரவையின் முடிவின் மூலம் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒப்பந்தத்தை கையொப்பமிட்ட பிறகு இறுதி செய்ய முடியும்” என்று அவர் கூறினார்.

Exit mobile version