Tamil News

மஹிந்தவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீட்டை கோரியுள்ள மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு அறிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயாராக உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து தான் 100 மில்லியன் ரூபாய் பணம் பெற்றதாக அமைச்சர் அமரவீர ஊடகங்களுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Maithripala seeks Rs. 1 Bn compensation from Minister Amaraweera - NewsWire

தனது தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் அமைச்சர் அமரவீர அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்த அமரவீரவின் அவதூறுகள் மூலம் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக 1 பில்லியன் ரூபாவை மகிந்த அமரவீர வழங்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன அக் கடிதத்தில் கோரியுள்ளார்.

Exit mobile version