Site icon Tamil News

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் தங்கியிருந்த விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், மேற்கொண்ட தேடுதலை அடுத்து நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. .

Exit mobile version