Site icon Tamil News

லிட்ரோ நிறுவனத்தை தனியாருக்கு மாற்ற முடிவு

லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியாருக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் விருப்பத்திற்கு (தனியார் நிறுவனங்களிடமிருந்து விருப்பத்திற்கு) அழைப்பு விடுத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (26) காலை தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் கடந்த வருடம் ஏறக்குறைய 700 கோடி ரூபா இலாபம் ஈட்டியதாகத் தெரிவித்த தலைவர், நிறுவனத்தை விற்பனை செய்வதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தலைவர் என்ற ரீதியில் இந்நாட்டு மக்களின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதே தனது இலக்கு எனவும் தேசிய மட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அமைச்சரவை போன்ற ஏனைய மட்டங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு மற்றுமொரு குழு இருப்பதாக தெரிவித்த பீரிஸ், அந்தக் குழுவின் தீர்மானத்திற்கு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் தமக்கு எந்தப் பொறுப்பும் பொறுப்பும் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version