Site icon Tamil News

வைத்தியர்களின் வெளியேற்றத்தினால் நெருக்கடிநிலையில் சுகாதாரத்துறை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பெற்ற  சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர கருத்து தெரிவிக்கையில்,  ​​விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version