Site icon Tamil News

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

குணதிலக்க ராஜபக்ஷ எம்.பியை தாக்கியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் நாமாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, தன்னை தாக்கி காலில் பலத்த காயம் ஏற்படுத்தியதாக தெரிவித்து அவரது மகனுடன் இணைந்து குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தாம் வன்மையாக மறுப்பதாகத் தெரிவித்த திரு அளுத்கமகே, அந்த இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இன்று (14) நாவலப்பிட்டி பிரதேசத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version