Site icon Tamil News

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான 14 வயது மாணவன் செய்த காரியம்

14 வயது சிறுவனொருவன் நடாத்திய கத்தி குத்து சம்பவத்தில் 09 வயது சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த கத்தி குத்து சம்பவத்தை அடுத்து, 14 வயதான சிறுவன் நஞ்சருந்திய நிலையில், எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஹம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துக்கு இலக்கான 09 வயதான சிறுவனின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு சிறார்களும் அயலவர்கள் என்பதுடன், சிறந்த நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.

09 வயதான சிறுவனின் உடலில் சுமார் 6 முதல் 7 கத்தி குத்து காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தி குத்தை நடாத்திய 14 வயதான சிறுவன், வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரிய வருகிறது.

09 வயதான சிறுவனின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவமொன்றை அடுத்து, 14 வயதான சிறுவன் எச்சரிக்கைப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் நேர்ந்துள்ளது.

கத்தி குத்து சம்பவம் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 09 வயதான சிறுவன் கத்தியுள்ளான்.

இதையடுத்து, வீட்டிற்குள் இருந்த 09 வயதான சிறுவனின் தாய் வெளியில் வந்து குச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரதேச மக்கள் ஒன்று கூடி, சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version