Site icon Tamil News

காரில் இருந்து வீசப்பட்ட பூனைக்குட்டி!! கனடா பொலிஸார் விசாரணை

காரில் இருந்து பூனைக்குட்டி ஒன்று பரபரப்பான மாகாண நெடுஞ்சாலையில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை 10:45 மணியளவில் வாட்டர்டவுன் அருகே நெடுஞ்சாலை 403 இன் கிழக்குப் பகுதியில் காரில் இருந்து பூனைக்குட்டி தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணை இழந்த பூனைக்குட்டிக்கு உள்ளூர் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார்.

பூனையை அதன் உரிமையாளர் ஜன்னல் வழியாக வீசினாரா அல்லது வழிதவறிச் சென்றதா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் பர்லிங்டன் OPPஐ 905-681-2511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version