Site icon Tamil News

கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலே குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version