Site icon Tamil News

நான் இலங்கைக்கு வர வேண்டிக்கொள்ளுங்கள்: போதகர் ஜெரோம் விசுவாசிகளிடம் கோரிக்கை

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பணமோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த நாட்டில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் வேளையில் அவர் சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து நேற்றைய தினம் சேவையொன்றை நடத்திய அவர், தன்னை இலங்கைக்கு அழைத்து வருமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ளுமாறு தனது விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இறைவன் என்னை விரைவில் உடல் ரீதியாக உங்களிடம் திருப்பித் தரும்படி நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் அங்கு கூறினார்.

பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பாக அவர் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கிய அதே நேரத்தில் அவர் மே 16 அன்று சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அதன்படி அவர் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வராத நிலையில், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version