Site icon Tamil News

பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேர நீதி நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹாஷிஸ்,
1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இன்றைய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version