Site icon Tamil News

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பயணத்தடையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனினும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version